நீண்ட காத்திருப்பு
Rs. 1,452.00
கொமடோர் போயகொட ஶ்ரீலங்கா கடற்படையின் அதிகாரியாக இருந்தவர். 74ல் கடற்படையில் இணைந்து 93ல் சாகரவர்த்தனா கடற்படைக் கப்பலின் தளபதியாக நியமிக்கப்படுகிறார். 94ம் ஆண்டு கற்பிட்டிக் கடற்பகுதியில் நங்கூரம் தரித்து நிற்கும்போது சாகரவர்த்தனா புலிகளின் கரும்புலித்தாக்குத்தலில் சிக்குகிறது. போயகொட புலிகளால் கைது செய்யப்படுகிறார்.
அடுத்த எட்டு ஆண்டுகள் புலிகளின் கட்டுப்பாட்டில் சிறைக்கைதியாகத் தான் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு சுயசரித நூலாக, போயகொட சொல்லச்சொல்ல, சுனிலா கலப்பதி கேட்டு எழுதியிருக்கிறார்.“A Long Watch” என்று ஆங்கிலத்தில் வெளியான அந்த நூலைத் தமிழில் தேவா மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நூலின் பெயர்தான்,
“நீண்ட காத்திருப்பு”
ஈழப்போர் சார்ந்த அனுபவ, சுயசரித நூல்கள் ஏராளம் வெளிவந்துவிட்டன. பல அனுபவங்கள் புனைவாக வெளிப்பட்டிருக்கின்றன. பல புனைவுகள் அனுபவங்களாக வெளிப்பட்டிருக்கிறன. தமிழ் தரப்பில் எழுதப்பட்டதுபோலவே சிங்களத் தரப்பிலும், குறிப்பாகப் படை அதிகாரிகளின் அனுபவங்களாகப் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றிலிருந்து மிகவும் வேறுபட்ட அனுபவத்தை நீண்ட காத்திருப்பு வாசிப்பு கொடுத்திருக்கிறது.
