கள்ளினும் இனிய
Rs. 2,310.00
இந்நூலில் இடம்பெற்றிருப்பவை திருக்குறள் காமத்துப்பாலின் நேரடிப் பொருள் விளக்கம் அல்ல. திருக்குறளை ஊன்றி வாசித்ததன் விளைவாக அய்யன் வள்ளுவனுக்கும் எனக்கும் இடையே உண்டான ஒரு அரூபத் தொடர்பில் எனக்கொரு சித்திரம் கிடைக்கிறது, காமத்துப்பாலில் உள்ள ஒவ்வொரு குறளும் அது எழுதப்படும்போது என்ன மனோநிலையில் எழுதப்பட்டிருக்கும் என்கிற உணர்வுக் கடத்தலில், நான் உணர்ந்து கொண்ட ஒன்றை எழுத்தில் கொண்டு வரப் பார்த்திருக்கிறேன். இது நான் உணர்ந்துகொண்டதுதானே தவிர திருக்குறளின் நேரடிப் பொருளாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அதற்கு ஆன்றோர்களும் சான்றோர்களும் எழுதி வைத்துவிட்டுப் போன ஏராள விளக்கவுரைகள் உள்ளன. அவர்களை வணங்கி, எம் தமிழ் மூத்தோன் வள்ளுவனின் தாழ்பணிந்து, அவரது பேராதி பேரனென்ற உரிமையோடு காமத்துப்பால் குறள்களை இந்நூலில் ஏந்தியிருக்கிறேன். – யாத்திரி
