கேட்காமலே தரலாம்
Rs. 990.00
எப்போதுமே வாழ்க்கையிலிருந்தும் இயற்கையிலிருந்தும்தான் கவிதைக்கான கருவும் வரிகளும் கிடைக்கின்றன. திரு நெடுந்தீவு சபேசனின் நூற்றுக்கும் மேற்பட்ட கவி வரிகளைப் படிக்கையில் இது மேலும் உறுதியாகிறது. நல்ல கவிதைகளையும் கதைகளையும் நினைவுக்கு கொண்டு வருவதுதான் ஒரு நல்ல கவிதைக்கு அழகு, அந்த வகையில் நெடுந்தீவு சபேசன் எழுதியிருப்பது நல்ல கவிதைகளே! – கவிஞர் கலாப்பிரியா
நான் 1980ல் உடுவிலில் இருந்து என் முன்னோர்களின் வாரான நெடுந்தீவுக்கு முதன்முதலில் சென்றபோது மக்களின் பேச்சு மொழியில் தூக்கலாக இருந்த கவிதைத் துணுக்குகள் என்னை ஆகர்சித்தது அண்மையில் நெடுந்தீவு சபேசனின் குறுங்கவிதைகளை வாசித்தபோது கவிதை பேசும் என் முன்னோர்களை நினைவு கூர்ந்தேன். – கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்
இத்தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் நீளமான சொற்பொழிவுகளாக இல்லாமல், குறுகிய வரிகளில் ஆழமான உண்மைகளைச் சொல்வதைக் காண முடிகிறது, இது ஒரு கவிஞரின் மிகப் பெரிய திறமை, சொல்லவேண்டிய உணர்வை மிகச் சுருக்கமாகச் சொல்லி வாசகரின் மனதில் நீண்ட நேரம் ஒலிக்கச் செய்வது எளிதான காரியம் அல்ல. அந்த அரிய திறனை இந்தத் தொகுப்பில் பல இடங்களில் கவிஞர் நெடுந்தீவு சபோன் வெளிப்படுத்தியிருக்கிறார். – வ.கீரா இயக்குனர், எழுத்தாளர்
Related products
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
சன்னல் மீதொரு ராட்சசி
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
தேசவிரோத மலர்
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
நா முத்துக்குமார் கவிதைகள்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
மழையை யாரும் நனைப்பதில்லை
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
குழந்தைகள் நிறைந்த வீடு
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
அன்பின் நிமித்தங்கள்
யாத்திரி (Yathiri)
ஒரு டீ சாப்டலாமா?
மனோபாரதி (Manobharathi)
தரைக்கு வராத இலைகள்
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
