சுந்தரகாண்டம்
Rs. 462.00
உலகில் வாழும் உயிரினங்கள் யாவும் கன்ம பலனை நுகர்ந்து வாழ்கின்றன. இவ்வுயிர்கள் ஏழு பிறவிகளைக் கொண்டு இயங்குவதாகச் சான்றோர்கள் பகர்வார்கள்,ஏழு,பிறவிகளாக தேவர்,மனிதர்,விலங்கு,பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவற்றை உரைப்பர். இவற்றில் மக்கள் பிறவியே மேன்மையுடையது. பிறவித்துன்பத்தை நீக்கிப் பிறவாப் பெரு நெறியை அடைய வேண்டுமானால் மூவகை ஆசைகளாகிய மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகியவற்றைத் துறக்க வேண்டும். இத்தகைய ஆசைகளின் காரணமாக விளையும் துன்பங்களை சான்றோர்கள் இதிகாச இலக்கியங்களாகிய இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் வாயிலாகப் புலப்படுத்தியுள்ளார்கள். தவிரவும் இறைவன் திரு அவதாரம் செய்து மக்களை நன்னெறிப்படுத்திய வரலாற்றினை இந்நூல்கள் சாற்றும். இவற்றில் கம்பராமாயணத்தில் சுந்தர காண்டமும், மகாபாரதத்தில் விராட பருவமும் பாராயணம் செய்வதற்கு உரிய பகுதிகளாக ஆன்றோர் வகுத்துள்ளனர். இவற்றுள் கம்பராமாயணம் சுந்தரகாண்டம் இங்குப் பாராயண உரைநூலாக வெளியிடப்படுகிறது.
Related products
இதயம் தருவோம் குழந்தைகளுக்கு
வசீலி சுகம்லீன்ஸ்கி (Vasily Sukhomlinsky)
கல்வெட்டுக்கள்
கவிப்பேரரசு வைரமுத்து (Kavipperarasu Vairamuththu)
தமிழர் பூமி
தீபச்செல்வன் (Theepachelvan)
கள்ளினும் இனிய
யாத்திரி (Yathiri)
ஈழம்: வந்தவர்களும் வென்றவர்களும்
ஜோதி கணேசன் (Yothi Ganesan)
அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்
வசுதேந்த்ரா (Vasudhendra)
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
க.சரவணன் (Ka.Saravanan)
பாலகாண்டம்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
பாட்டுவாசி
இளம்பரிதி கல்யாணகுமார் (Elambarithi Kalyanakumar)
திரைக்கதை எழுதுவது எப்படி?
சுஜாதா (Sujatha)
மண்ட பத்தரம்
கோபிநாத் (Gopinath)
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தீர்வு
மதிவதனி (Mathivathani)
