யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 – 1348)

Rs. 4,800.00

Out of stock
Book Title: யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (Yaazhppana Nakarathin Valarchi Varalaru)
Author: இ. மயூரநாதன் (R. Mayooranathan) Categories: , , Publisher: எழுநா (Ezhuna), குமரன் புத்தக இல்லம் (Kumaran Book House)
Pages: 496
Format: Hardcover
ISBN: 9786246709068
SKU: BK-TA-HC-10044

2021 ஆம் ஆண்டில் நவீன யாழ்ப்பாண நகரம் தனது 400 ஆண்டுகால இருப்பை நிறைவு செய்தது. இந்நகரின் தோற்றம், வளர்ச்சி என்பவற்றைக் குறித்து விரிவான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், இந்தக் குறையை ஓரளவாவது தீர்க்கும் முன்னோடி முயற்சியாக இந்நூல் அமைகிறது. குறித்த 400 ஆண்டுகளில், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகியோரின் குடியேற்றவாத ஆட்சிகள் நிலவிய 327 ஆண்டு காலத்து நகரின் வளர்ச்சியை நூற்றுக்கு மேற்பட்ட நிலப்படங்கள், வரைபடங்கள், ஒளிப்படங்கள் ஆகியவற்றின் உதவியுடன் இந்நூல் விளக்குகிறது. மேற்படி வளர்ச்சிகளின் பின்னணிகளைச் சரியாக விளக்குவதற்காக குடியேற்றவாத ஆட்சிகளுக்கு முற்பட்ட நல்லூர்க் கால நிலைமைகள் குறித்தும் நூல் ஆராய்கிறது.

அக்காலப்பகுதியின் பல்வேறு காலகட்டங்களினூடாக ஆட்சியாளர்களினதும் குடிமக்களினதும் தேவைகளுக்கும் அரசியல், சமூக, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் ஏற்ப, பாதுகாப்பு, நிர்வாகம், வணிகம், கல்வி, சமயம், வீதியமைப்பு, போக்குவரத்து, பொதுவசதிகள் முதலிய பல்வேறு துறைகள் சார்ந்து நகரம் வளர்ச்சியடைந்த விதம் குறித்து நூல் விரிவான விளக்கங்களைத் தருகிறது.